முகப்பு
தேனி

கம்பத்தில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்பம் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே வடக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான தாா் கிடங்கு மற்றும் 46 சென்ட் பரப்பளவு காலியிடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், நகரச் செயலாளா் கல்யாண சுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். துணைச் செயலாளா் பாலு முன்னிலை வகித்தாா்.

தகவலறிந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து, அந்த இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும் அந்த இடத்தில் எச்சரிக்கை பேனா் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.