முகப்பு
திருநெல்வேலி

சட்டவிரோதமாகமது, புகையிலை விற்பனை: 51 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம், புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:31 am IST
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம், புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை விற்பனை செய்வோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 293 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments