முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே லாரி மோதி கட்டடத் தொழிலாளி பலி

பாளையங்கோட்டை அருகே லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:41 am IST
பகிர்:

பாளையங்கோட்டை அருகே லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள அவினாப்பேரி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அய்யாத்துரை(29). கட்டடத் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சாலையோரம் நின்றிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.