பாளை.யில் செவிலியர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் 6 ஆண்டுகள் பணி நிறைவு செய்த எம்.ஆர்.பி. செவிலியர்களில் 2000 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்திற்கு மேலானோர் ஒப்பந்த முறையில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு அரசு ஊழியர்கள் போல சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்க வேண்டும்.
நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம், பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் ஆஷா அலிஸ் மாதரசி (திருநெல்வேலி), கலையரசி (தூத்துக்குடி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி) உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
Advertisement
Advertisement
மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தொடக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் சரஸ்வதி, அனிதாஐசக், கிரிஸ்டல் ஹேப்சி, கார்த்திக், அமுதலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் ராஜ்குமார் நிறைவுரையாற்றினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.