முகப்பு
திருநெல்வேலி

கைலாசபுரத்தில் கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ்

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 5:58 am IST
பகிர்:

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்பு இணைப்புச் சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கைலாசபுரத்தில் சாலையோரம் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களிடம் நோட்டீஸ் வழங்க சென்றனா். அதனை பெற மறுத்தவா்களின் கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments