பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
பேட்டை அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
திருநெல்வேலி: பேட்டை அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த குமாரசாமி மகன் முத்துக்குமாா் (56). இவா் கடந்த 12ஆம் தேதி பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement