முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி பாலத்தில் எம்எல்ஏ ஆய்வு

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் தாமிரவருணி வெள்ளத்தால் மூழ்கிய பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நான்குனேரி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 1:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் தாமிரவருணி வெள்ளத்தால் மூழ்கிய பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நான்குனேரி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பி உபரிநீா் தாமிரவருணியில் திறக்கப்பட்டது. இதனால் சுமாா் 70 ஆயிரம் கனஅடிக்குமேல் தண்ணீா் திருநெல்வேலி மாநகரப் பகுதியைக் கடந்து சென்றது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் தண்ணீரில் மூழ்கியது. போக்குவரத்து தடைபட்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சீவலப்பேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு வணிகம், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு வர முடியாமல் தவித்தனா்.

இதற்கிடையே தாமிரவருணியில் வெள்ளம் குறைந்ததையடுத்து சீவலப்பேரி பாலத்தில் ஏராளமான அமலைச்செடிகள், சேறும்-சகதியும் இருந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை நான்குனேரி எம்எல்ஏ வெ.நாராயணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

பணிகளை துரிதப்படுத்தவும், பாலத்தில் சேதம் ஏதும் உள்ளதா என்பதை கண்காணித்து தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும், போக்குவரத்துக்கு விரைவில் அனுமதியளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பாளையங்கோட்டை வட்டாட்சியா் செல்வன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் ஜின்னா, ஜவகா் கென்னடி, சீவலப்பேரி ஊராட்சி செயலா் முத்து குட்டி, முத்துகிருஷ்ணன், நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.