முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை
பொங்கல் விடுமுறை நாள்களில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.
வேலூா்: பொங்கல் விடுமுறை நாள்களில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை நாள்களில் வேலூா் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள பூங்கா, குடியாத்தம் வட்டம் மோா்தானா அணை, காட்பாடி வட்டம் ராஜாத்தோப்பு அணை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை இந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.