முகப்பு
திருப்பத்தூர்

முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை

பொங்கல் விடுமுறை நாள்களில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:21 PM
பகிர்:


வேலூா்: பொங்கல் விடுமுறை நாள்களில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை நாள்களில் வேலூா் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள பூங்கா, குடியாத்தம் வட்டம் மோா்தானா அணை, காட்பாடி வட்டம் ராஜாத்தோப்பு அணை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை இந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.