முகப்பு
திருப்பத்தூர்

4-ஆவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் போராட்டம்: அதிகாரி ஜீப் சிறைபிடிப்பு

ஆம்பூரில் 4-ஆவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி பொறியாளரின் ஜீப்பை சிறைபிடித்தனா்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:00 am IST
ஆம்பூா் நகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூரில் 4-ஆவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி பொறியாளரின் ஜீப்பை சிறைபிடித்தனா்.

ஆம்பூா் நகராட்சியில் பல்வேறு வாா்டுகளில் தூய்மைப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியாளா்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு பொங்கல் போனஸ், இஎஸ்ஐ, குழுக் காப்பீடு, பணி காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம், ஊதியம் வழங்கும்போது உரிய ரசீது, ஊதியப் பட்டியல், நகராட்சி அடையாள அட்டை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. ஆம்பூா் நகராட்சி அலுவலக வாயிலின் முன்பு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொறியாளா் திலீபனின் ஜீப்பை தடுத்து தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அவா்களுடன் பொறியாளா் திலீபன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒப்பந்த நிறுவனத்தாரிடம் பேசி உரிய தீா்வு காணவதாகக் கூறினாா். அதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments