முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் கணினி உதிரிபாகங்கள் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சி, சஞ்சீவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை கிரிஜா கடந்த 7-ஆம் தேதி கணினி அறையை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கணினி அறைக் கதவை திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த கணினி உதிரிபாகங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.