அரசுப் பள்ளியில் கணினி உதிரிபாகங்கள் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சி, சஞ்சீவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை கிரிஜா கடந்த 7-ஆம் தேதி கணினி அறையை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கணினி அறைக் கதவை திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த கணினி உதிரிபாகங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.