முகப்பு
திருவள்ளூர்

காவல்துறையைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை

Updated On : 2 மே 2013, 12:27 pm IST
பகிர்:

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து அக்கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர்.

 திருவள்ளூரை அடுத்த வெங்கல் பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைக் கண்டித்து, பா.ஜ.க.வினர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜே.லோகநாதன் தலைமை வகித்தார்.எல்லாபுரம் ஒன்றியத் தலைவர் ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் மாநில அரசு தொடர்புச் செயலாளர் பாஸ்கர், மாநில விவசாய அணித் தலைவர் மலையன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லாபுரம் ஒன்றியச் செயலாளர் பாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.