முகப்பு
திருவள்ளூர்

கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

Updated On : 2 மே 2013, 12:27 pm IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் ஆகியவற்றில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றார்.மேலும் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.