முகப்பு
திருவள்ளூர்

விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம்

திருநின்றவூரில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 2 மே, 2013 at 12:24 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

திருநின்றவூரில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகலிங்கம் வரவேற்றார்.

Advertisement

தீர்மானங்கள்:

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு விடைத்தாளை திருத்த ரூ.10 வழங்க வேண்டும்.

தமிழ், ஆங்கில பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் பி.நாராயணசாமி, மாநிலப் பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் செல்வகுமாரி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.மாவட்டத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.