முகப்பு
திருவள்ளூர்

கால் இடறி விழுந்து பெண் சாவு

திருவள்ளூர் அருகே தண்ணீர் குடம் தூக்கிச் சென்ற பெண் கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 11:09 am IST
பகிர்:

திருவள்ளூர் அருகே தண்ணீர் குடம் தூக்கிச் சென்ற பெண் கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லய்யா மனைவி ஜோதி (42).

இவர் கடந்த 8-ம் தேதி, தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

    அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

     இது குறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.