முகப்பு
திருவள்ளூர்

பேக்கரி உரிமையாளர் தற்கொலை

கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லைக் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை

Updated On : 12 செப்டம்பர் 2013, 11:09 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லைக் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் வசித்து வந்தவர் ஜெயகோபி (30). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் பேக்கரி நடத்தி வந்தார்.

இவரது மனைவி பாலுமீனா (25). இவர்களுக்கு நிருதுலா என்ற 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஜெயகோபிக்கு பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமானோரிடம் ஜெயகோபி வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடனைத் திரும்பக் கொடுக்க முடியாததால் கடன்காரர்கள் அவருக்கு நெருக்கடிக் கொடுத்து வந்தனராம்.

இதனால் சில நாள்களாக மனமுடைந்துக் காணப்பட்ட ஜெயகோபி, திங்கள்கிழமை இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.