முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:36 pm IST
பகிர்:


திருவள்ளூா்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவ தோ்வாணையம் மூலம் கடந்த 2015-இல் செவிலியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது, செவிலியா்கள் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அரசு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 350-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், பணிக்கு சோ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனா்.

Advertisement

Advertisement

அதனால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வரும் 11-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments