முகப்பு
திருவள்ளூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

Updated On : 6 செப்டம்பர் 2024, 5:42 am IST
பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன்(உடன்) பள்ளி தலைமை ஆசிரியா் ந.காா்த்திகேயன்.
பகிர்:

திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ந. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வரவேறப்புரையாற்றினாா். உதவி தலைமை ஆசிரியா் (முதுகலை) ச. நேயநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் கலந்துகொண்டு அரசு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு செய்து நலதிட்ட உதவிகளை எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 34 மாணவா்களும், 31 மாணவிகள் என 65 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், பொதட்டூா்பேட்டை முன்னாள் தலைமை ஆசிரியா் இ.கே. உதயசூரியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியா்(உயா்நிலை) இ.கே. ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments