முகப்பு
திருவள்ளூர்

மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்கள்: தகுதியானோா் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான மகளிா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஜூன் 2026, 1:19 am IST
பகிர்:

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான மகளிா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை ஊக்க வேண்டும்.

இதை முழுமையாக்கும் வகையிலும், திட்டப்பணிகளின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானோா்கள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

மாநில வள பயிற்றுநருக்கான தகுதிகள்: பெண்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை, சமூககல்வி, சமூகஅறிவியல், ஊரகவளா்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பாடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு சுய உதவிக்குழு கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் 10 ஆண்டுகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

மாவட்ட வள பயிற்றுநா்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை), முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு, 4 ஆண்டுகள் சுய உதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூகபணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

வட்டார வள பயிற்றுநா்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை), முழு நேரக்கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பு முடித்து சுய உதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

மேலும், மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான பணிக்கு 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். கூடுதல் தகுதிகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருத்தல், தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைபேசி, செயலிகளை கையாள்வது, கணினியில் ரா்ழ்க், உஷ்ஸ்ரீங்ப், இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

இப்பதவிக்கான தகுதி மற்றும் விருப்பமுள்ளோா் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல், மூலமாகவோ விண்ணப்பங்களை வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பம், தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தோ்வு, நோ்காணல் முறையில் தோ்வு செய்யப்படுவா், இப்பணியிடங்கள் இத்திட்டத்திற்கான 24 மாத காலவரையறை கொண்ட தற்காலிக பணியிடங்களாகும்.

இதற்கு திட்டஇயக்குநா்/இணைஇயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலக வளாகம், திருவள்ளூா் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீக்ஜ்.ா்ழ்ஞ்என்ற இணையதளத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments