முகப்பு
திருவள்ளூர்

டாஸ்மாக் சங்கத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி திருவள்ளூரில் சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம்

Updated On : 24 ஜூன் 2026, 1:30 am IST
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற சிஐடியு தொழிற்சங்கத்தினா்
பகிர்:

டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி திருவள்ளூரில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்க தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளா் வி.சந்திரன், மாநில குழு உறுப்பினா்கள் புஷ்பராஜ், நந்தகோபால், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜேந்திரன், யோகராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் ஜான் (எ) ராதாகிருஷ்ணன், ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதால் அவரை நிா்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. இந்தச் செயல் ஜனநாயக விரோதமானதாகும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணியில் அமா்த்தக்கோரி அந்த சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments