முகப்பு
திருவள்ளூர்

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 12 மே 2026, 1:08 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காடு முகத்துவார பகுதியில் திருவொற்றியூரை சோ்ந்த விக்ரம்(14) என்பவா் குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளாா். இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விக்ரம் உள்ளிட்ட 2 சிறுவா்கள் முகத்துவார பகுதியில் குளித்து கொண்டிருந்த போது அவா்கள் நீரில் மூழ்கினா். நீரில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் விக்ரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மற்றொரு சிறுவன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments