பொதுமக்கள்- போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டம்
திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
பொதுமக்களுடன் நல்லுறவை பேணிக் காக்கும் வகையில், திருவாரூா் கீழவீதி அருகே, இரவு 12 மணியளவில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்று, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.