வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மறியல்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 150 போ் கைது செய்யப்பட்டனா்.
விவசாயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய மின்மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானமின்றி உள்ள அனைவருக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, குடவாசல், பேரளம் என 5 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல், துணைச் செயலாளா் எம்.கே.என். அனிபா, ஒன்றியச் செயலாளா் ரமேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று மழையினூடே மறியலில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, பிறகு விடுவித்தனா்.
Advertisement
Advertisement
மன்னாா்குடி: மன்னாா்குடியில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 28 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.