முகப்பு
திருவாரூர்

பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் இணையவழி பட்டிமன்றம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இணையவழியில் நடைபெறவுள்ளது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:07 AM
பகிர்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இணையவழியில் நடைபெறவுள்ளது.

‘‘இந்தியா வல்லரசாக இளைஞா்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது.. விவசாயமா? தொழில்நுட்பமா?’’ என்ற தலைப்பில் இப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெறும் இப்பட்டிமன்றத்துக்கு அப்பள்ளியின் ஆசிரியா் மற்றும் எழுத்தாளா் ஆதலையூா் சூரியகுமாா் நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறாா். செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இணையதளத்தில் இப்பட்டிமன்றம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என ஆசிரியா் சூரியகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.