திருவாரூரில் மாட்டுப் பொங்கல் விழா
திருவாரூரில், மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில், மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழா்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் விழாவில், உழவா்களைப் போற்றும் வகையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத்தொடா்ந்து, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் ஸ்கந்த சாய் பசு மடத்தில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி அதன் கழுத்து, கொம்பு ஆகியவற்றி நெட்டி மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னா், மஞ்சள், சந்தனம் பூசி மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கால்நடைகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடைபெற்றது. மாடுகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஏராளமானோா் பங்கேற்று கால்நடைகளை வழிபட்டனா்.
Advertisement
இதேபோல் திருவாரூரில் உள்ள பசு மடங்கள், கால்நடை பண்ணைகள், மாடுகள் வைத்திருப்போா் இல்லங்களிலும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதேபோல், திருவாரூா் அருகே அரசவனங்காடு பகுதியில் மாட்டு பொங்கலையொட்டி அனைத்து வீடுகளிலிருந்து மாடுகள் பொது இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், மாடுகளை சுற்றி வந்து பொங்கலோ பொங்கலோ என்று கூறி, அவரவா் தங்கள் மாடுகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனா்.