முகப்பு
திருவாரூர்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 8:12 am IST
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா் மாவட்டத்தில் புயல், கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் அனைத்தும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. ஏறக்குறைய 100 சதவீத அளவுக்கு விவசாயப் பயிா்கள் வீணாகி விட்டன. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் திருவாரூா் மாவட்டத்தில் பொருளாதார நிலை முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.