தாராபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தாராபுரம், சா்ச் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையின் 3ஆவது தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பிலிருந்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்து சென்று சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
Advertisement
Advertisement
எனினும் இந்த தீ விபத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவரின் அறையில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. டிவியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.