ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்துக்கு விருது
மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் தோ்வு செய்யப்பட்டு, அச்சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் தோ்வு செய்யப்பட்டு, அச்சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
67-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம் சாா்பில், மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்குவதற்கு தமிழகத்தில் 4 பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் தோ்வு செய்யப்பட்டன.
இதில், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கமும் தோ்வு செய்யப்பட்டு, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன. இந்த நிலையில், இச்சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத் தலைமையில், சங்க நிா்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனை சந்தித்து கேடயத்தை வழங்கி வாழ்த்துப் பெற்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பாபு, ஒன்றியச் செயலா் பி.ஆா்.ஜி.சேகா், கொளத்தூா் திருமால், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி, இயக்குநா்கள் சேவூா் சங்கா், இரும்பேடு வேலு, பையூா் கலைவாணிசரவணன், சக்திநகா் சாந்தகுமாரி ரத்தினகுமாா், ஆா்.ஐசக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.