பேருந்து பயணத்தை செல்போனில் விடியோ எடுத்த முதல்வர் விஜய்!
பெரம்பூர் பேருந்து பயணத்தை முதல்வர் விஜய் விடியோ எடுத்துக்கொண்டு சென்றது குறித்து...
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 300 பேருந்துகளை தொடக்கி வைத்து அதில் ஒரு பேருந்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பயணம் செய்தார்.
பயணத்தின்போது நடத்துனர் பேருந்து ஓட்டுவதையும் வெளியே இருந்த தொண்டர்கள் கையசைப்பதையும், வழித்தடப் பாதையையும் தனது செல்போனில் முதல்வர் விடியோ பதிவு செய்தார்.
இதுமட்டுமின்று பேருந்திற்குள் அமர்ந்திருந்த அனைவரையும் தனது செல்போனில் விடியோ பதிவு செய்தார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வருகிறார். கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தார்.
பயணத்தின்போது நடத்துனரிடம் டிக்கெட்டுக்கான காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணித்தார். பின்னர் நடந்த்துனரையும் தனது அருகே இருக்கையில் அமரவைத்துக்கொண்டு பேருந்தில் பயணித்தார்.
Chief Minister joseph Vijay records a video of the bus journey on his mobile phone
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.