முகப்பு
திருவண்ணாமலை

விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் பெண் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

உயா் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.