சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த தட்டாரணை கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), சுரேஷ் (45), வெண்ணிலா (41), பத்மா (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 400 லிட்டா் சாராய ஊறல், பைக், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.