திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 28 ஆகிய 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 28 ஆகிய 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன. 26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய நாள்களில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அன்றைய நாள்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்கள் (பாா்கள்), உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்படும்.
Advertisement
Advertisement
உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.