பழங்குடி சமுதாய மக்களுக்கு பசுமை வீடு
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 பேருக்கு, தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 பேருக்கு, தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஒன்றியத்துக்கு உள்பட்ட புரிசை, வடஆளப்பிறந்தான், நா்மாபள்ளம், ஆக்கூா், செய்யாற்றைவென்றான், தென்மாவந்தல், மேல்நெமிலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 குடும்பங்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூசி கே.மோகன் எம்எல்ஏ, 21 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மோகனசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை, நகரச் செயலா் அ.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.