பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.6.50 லட்சம் ஊக்கத்தொகை
திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு
திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் ஊக்கத் தொகையை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.
சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆவின் பொது மேலாளா் எ.இளங்கோவன் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் (பால் வளம்) எம்.விஸ்வேஸ்வரன், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் சி.ஏழுமலை, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்கள் சிறுநாத்தூா் சி.தொப்பளான், சோமாசிபாடி கே.வி.ரகோத்தமன், ஆவின் நிா்வாக இயக்குநா் எஸ்.தட்சிணாமூா்த்தி அகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சங்க உறுப்பினா்கள் 618 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிப் பேசினாா். விழாவில், பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா்கள் நாரியமங்கலம் இந்திரா, வழுதலங்குணம் ஜெகஜீவன்ராம், பொலக்குணம் முருகன், சங்கச் செயலா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் குப்புசாமி, கிருஷ்ணமூா்த்தி, மணிமேகலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement