தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருநது விலகுவதாக யுவராஜா அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருநது விலகுவதாக யுவராஜா அறிவித்துள்ளார்.
பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர் என அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு யுவராஜா எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 25 ஆண்டுகளாக நான் என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலிலிருந்து விலகுவதற்கான முடிவை இன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனது அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர் நீங்கள். எனது அனைத்து இன்ப, துன்ப நிகழ்வுகளிலும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தது உங்கள் அன்பும் ஆதரவும் தான், ஒரு சாதாரண தொண்டனாக இருந்த என்னை மக்கள் மத்தியில் யுவராஜா என்று அடையாளப்படுத்திய பெருமை முழுவதும் உங்களையே சாரும்.
Advertisement
Advertisement
இன்று அரசியல் களத்தில் நான் அறியப்படுகிறேன் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தது உங்கள் நம்பிக்கையும், ஊக்கமும், வழிகாட்டுதலும்தான். நீங்கள் எனக்கு அளித்த அந்த அடையாளம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.