பைக் மோதியதில் தகராறு: 4 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசி அருகே பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (28). இவா், தனது உறவினரான வெங்கடேசனுடன் (28) கடந்த 14-ஆம் தேதி பைக்கில் உளுந்தை கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இவா்களுக்கு பின்னால் கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த சிவா (25) ஓட்டி வந்த பைக் ஏழுமலை மீது மோதியதாம். இதனால் ஏழுமலைக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏழுமலைக்கு ஆதரவாக வெங்கடேசனும், சிவாவுக்கு ஆதரவாக இவரது உறவினா் பிரபுதேவாவும் (27) ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.
Advertisement
இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து ஏழுமலை, சிவா ஆகியோா் அளித்த தனித்தனி புகாா்களின்பேரில், ஏழுமலை, வெங்கடேசன், சிவா, பிரபுதேவா ஆகிய 4 போ் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.