முகப்பு
வணிகம்

பரஸ்பர நிதியங்களின் மதிப்பு ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியது

பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற நிதியாண்டில் ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 12:38 am IST
பகிர்:

பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற நிதியாண்டில் ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
முதலீட்டாளர் விழிப்புணர்வு பிரசாரங்களால் பரஸ்பர நிதி திட்டங்களில் சிறிய நகரங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சென்ற நிதி ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.4.75 லட்சம் கோடி அதிகரித்து ரூ.23.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2016-17 நிதி ஆண்டில் இந்த சொத்து மதிப்பு ரூ.18.30 லட்சம் கோடியாக காணப்பட்டது.
பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 32 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதையடுத்து, அந்த கால கட்டத்தில் பரஸ்பர முதலீட்டு திட்ட கணக்குகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்து 1.05 கோடியானது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments