முகப்பு
வணிகம்

என்ஆா்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்

Updated On : 13 மார்ச் 2025, 6:06 am IST
பகிர்:

வெளிநாடு வாழ் இந்திய (என்ஆா்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெளிநாடுகளில் வாழும் இந்திய மகளிருக்காக மேம்படுத்த அம்சங்கள் அடங்கிய சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை திட்டத்தை பொதுத் துறை வங்கியொன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.

Advertisement

Advertisement

‘பிஓபி குளோபல் வுமன் என்ஆா்இ & என்ஆா்ஓ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கணக்கு திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments