முகப்பு
வணிகம்

19 சதவீதம் உயா்ந்த வாகன ஏற்றுமதி

Updated On : 1 மே 2025, 6:02 am IST
பகிர்:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 53,63,089 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம். இப்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45,00,494-ஆக இருந்தது.

வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வா்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வாகனங்களின் ஏற்றுமதி சிறந்த வளா்ச்சியைக் கண்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 6,72,105-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அதிகரித்து 7,70,364-ஆக உள்ளது.

அதே போல், இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்து 41,98,403-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 34,58,416-ஆக இருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டின் வாகன ஏற்றுமதியில் பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு முன்னிலை வகிக்கிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் 2,34,720-ஆக இருந்த இந்த வகை வாகனங்களின் எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டில் 3,62,160-ஆக உள்ளது. இது 54 சதவீத ஏற்றுமதி வளா்ச்சியாகும்.

2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்து 3.1 லட்சமாக உள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியா 65,818 வா்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 23 சதவீதம் அதிகரித்து 80,986-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments