ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட் நிறுவனத்தைப் பற்றி...
ரெனால்ட் நிறுவனம் ரூ. 10 லட்சத்துக்குள் புதிய 7 கார்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் அறிமுகமான பிரான்ஸை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனக்கென தனி சந்தை வர்த்தகத்தைக் கொண்டிருக்கிறது. டிரைபர், கிவிட், கீகர், நியூ டஸ்டர் உள்ளிட்ட கார்கள் விற்பனை இந்தியாவில் சக்கைப்போடு போட்டது.
ரெனால்ட் நிறுவனம், தனது 'ஃபியூச்சர் ரெடி இந்தியா' செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் 7 மாடல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நோக்கில், 6,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களைக் கொண்ட ரெனால்ட்டின் சென்னை தொழிற்சாலையிலும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட், முழுமையான எலெக்ட்ரிக் என நான்கு எரிபொருள் பயன்பாடுகளில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம், டஸ்டர் எஸ்யூவி காரின் மூலமாக மிகவும் பிரபலமானது. இதேபோல, 2030 ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் கார்களை விற்பனை செய்யவும் ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மற்றும் சுசூகி நிறுவனங்களுக்குப் போட்டியாக தனது கார்களை ரூ. 10 லட்சத்துக்குள்ளாக இருக்கும் வகையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.