ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து வருகிறது.
புதுதில்லி: பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாதம் விற்பனையான 2,602 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026ல் தனது உள்நாட்டு மொத்த விற்பனை இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து 5,413 வாகனங்களாக இருப்பதாக ரெனால்ட் தெரிவித்தது.
நிறுவனம், புதிய நிதியாண்டை மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர் 2025ல் புதிய தலைமுறை ரெனால்ட் டிரைபர் மற்றும் கைகர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி வருகிறதாக தெரிவித்தது.
Advertisement
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காருக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் விநியோகம் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே அதற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.