முகப்பு
வணிகம்

பாா்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:28 AM
பகிர்:

நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியா் நிறுவனத்தின் பாா்சல் வணிகத்தை மேம்படுத்த இருதரப்பும் புதிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த இருதரப்பு ஒத்துழைப்பு, தற்போதைய ஒப்பந்தத்தின்மூலம் அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.

தபால் துறையின் பாா்சல் இயக்குநரக பொது மேலாளா் நீரஜ் குமாா் ஜா, டிடிடிசி நிறுவனத்தின் தேசிய தலைவா் ஜதிந்தா் சேத்தி ஆகியோா் முன்னிலையில் கையொப்பமான இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1.64 லட்சம் தபால் நிலையங்களை டிடிடிசி நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதன் விளைவாக, தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு இணையவழி வணிகத் தயாரிப்புகளை மிக விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் விநியோகிக்கும் வசதி மேம்படும்.

இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இரண்டு நிறுவன அதிகாரிகளும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனா்.