நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கியது!
நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கப்பட்டது பற்றி...
நாடு முழுவதும் சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தொடங்கியது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மறுதேர்வு இன்று நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.
இந்த மறுதேர்வை முறைகேடுகளின்றி நடத்துவதற்காக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Advertisement
Advertisement
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடையும்.
ஏற்கெனவே, நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிந்ததால், டெலிகிராம் செயலி முடக்கம், வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்று விநியோகம் செய்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.