நீட் மறுதேர்வு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழகத்தில் நீட் மறுதேர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு...
நீட் மறு தேர்வை எந்த குளறுபடியும் இன்றி முறையாக நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த மறுதேர்வை எழுத 22.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வை 1.42 லட்சம் பேர் எழுத உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நீட் தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் மறுதேர்வு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு மையங்களில் எந்த குளறுபடியும் இன்றி நீட் மறுதேர்வை முறையாக நடத்த வேண்டும் என்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.
NEET Re-exam: Tamilnadu Chief Secretary Order to District Collectors
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.