4-ஆம் காலாண்டு லாபம்... சிட்டி யூனியன் வங்கி 25% வளா்ச்சி
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவைடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.360 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் லாபமான ரூ.288 கோடியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத வளா்ச்சியாகும்.
வங்கியின் நிா்வாக இயக்குநா் ச.காமகோடி (படம்) வெளியிட்ட அறிக்கையின்படி, 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூ.1,124 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து, ரூ.1,326 கோடியை எட்டியுள்ளது.
Advertisement
வங்கியின் மொத்த வணிகம் முந்தைய நிதியாண்டை விட 24 சதவீதம் உயா்ந்து, ரூ.1,45,007 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வைப்புத்தொகை 23 சதவீதம் உயா்ந்து, ரூ.78,308 கோடியாகவும்; கடன்கள் 26 சதவீதம் உயா்ந்து, ரூ.66,699 கோடியாகவும் உள்ளன.
வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,830 கோடியாக உயா்ந்துள்ளதோடு, மூலதன விகிதம் 21.92 சதவீதமாக வலுவான நிலையில் உள்ளது.
இச்சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு பங்கின் முகப்பு மதிப்பில் (ஃபேஸ் வேல்யூ) 200 சதவீத ஈவுத்தொகையையும்; ஒவ்வொரு 3 பங்குகளுக்கும் ஒரு கூடுதல் இலவச பங்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.