மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு மற்றும் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணத்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிலைபெற்றது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை மத்தியில் ரூபாய் சற்று எதிர்மறையான சார்புடன் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.56 ஆக தொடங்கி, இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூ.90.75 என்ற குறைந்தபட்ச அளவிலும் பிறகு அதிகபட்சமாக ரூ.90.46 என்ற நிலைக்கு சென்று இறுதியில் ரூ.90.70 ஆக நிலைபெற்று அதன் முந்தைய முடிவை விட 14 காசுகள் சரிவைப் பதிவு செய்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாய் மதிப்பு நேர்மறையான குறிப்பில் நிலைபெற்று, டாலருக்கு நிகராக 10 காசுகள் உயர்ந்து ரூ.90.56 ஆக இருந்தது.
The rupee depreciated 14 paise to close at 90.70 against the US dollar on Wednesday, on dollar demand from importers and geopolitical tensions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.