மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக நிலைபெற்றது.
டாலரின் வலுவான நிலை, தீவிரமடைந்து வரும் அமெரிக்க-ஈரான் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட நேர்மறையான உந்துதலும் ரூபாய் உயர்வுக்கு ஆதரவளிக்கத் தவறிவிட்டதாக அந்நிய செலாவணி வர்த்தரகள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.94 ஆக தொடங்கி, பிறகு ரூ. 91.04 என்ற இன்ட்ராடே வர்த்தகத்தில் குறைந்தபட்சத்தை எட்டியது. முடிவில், அதன் முந்தைய இறுதி நிலையை விட 31 காசுகள் சரிந்து ரூ. 90.99 ஆக முடிவடைந்தன.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) அந்நியச் செலாவணி சந்தை மூடப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.