மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்த ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ்!
பங்குச் சந்தைகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் அறிமுகமானாலும், இறுதியில் எவ்வித மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.
புதுதில்லி: ஜவுளித் தயாரிப்பு நிறுவனமான 'ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ்' பங்குகள், பங்குச் சந்தைகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் அறிமுகமானாலும், இறுதியில் எவ்வித மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன.
நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையான ரூ. 136 லிருந்து 4.41 சதவீதம் சரிந்து ரூ. 130-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது.
பிறாகான வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், 0.33% உயர்ந்து ரூ. 136.45 ஆக உயர்ந்தது. அதே வேளையில், நிஃப்டி-யில் இந்த பங்குகள் 0.36 சதவீதம் உயர்ந்து ரூ. 136.49 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தன.
Advertisement
Advertisement
இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 602.32 கோடியாக இருந்தது.
ரூ. 125 முதல் ரூ. 136 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ. 170 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை நிறுவனம் சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வெளியீடு மூலம் ஒட்டுமொத்தமாக 4.64 மடங்கு சந்தா பெறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.