முகப்பு
வணிகம்

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!

தெலங்கானாவின் அமைந்துள்ள தனது 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 9:22 pm IST
NTPC
பகிர்:

புதுதில்லி: தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைந்துள்ள 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக என்டிபிசி இன்று தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியான 41.6 மெகாவாட் திறன் கொண்ட பிரிவை, ஜூன் 30, 2026 முதல் வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.

இந்த 41.6 மெகாவாட் திறன் கொண்ட பிரிவு செயல்பாட்டிற்கு வந்ததன் மூலம், ராமகுண்டத்தில் உள்ள என்டிபிசி-யின் சூரியசக்தித் திட்டத்தின் முழுமையான 176 மெகாவாட் திறனும் வணிக ரீதியான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த திட்டத்தின் மூலம் 100 மற்றும் 34.4 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தித் திட்டம் ஏற்கனவே மே 2, 2026 மற்றும் மே 29, 2026 ஆகிய தேதிகளில் வணிக ரீதியான செயல்பாட்டிற்கு வந்துவிட்டன.

இதன் மூலம், என்டிபிசி குழுமத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 90,899 மெகாவாட்டாகவும், வணிக ரீதியான செயல்பாட்டுத் திறன் 89,819 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments