முகப்பு
வணிகம்

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

Updated On : 20 மார்ச் 2026, 8:30 pm IST
பகிர்:

புதுதில்லி: மதிப்பு மற்றும் நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, அதன் பகுதி நேரத் தலைவரும், இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் இன்றும் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து ரூ.778.60-ஐ எட்டியது. பிறகு 2.41 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் 2.22 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிறைவு.

Advertisement

Advertisement

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.95,575.65 கோடி சரிந்து ரூ.12,01,267.28 கோடியாக உள்ளது.

summary

Shares of HDFC Bank ended over 2 per cent lower on Friday, after its non-executive chairman Atanu Chakraborty abruptly resigned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments