உருளைக்கிழங்கு மொச்சை கரம் மசாலா
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தேவையானவை:
வேக வைத்த உருளைக் கிழங்கு - 3
வேகவைத்த மொச்சை - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
புளி கரைசல் - கால் கிண்ணம்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், உருளைக் கிழங்கு, மொச்சை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும்.
கடைசியாகப் புளி கரைசல் சேர்த்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கொத்துமல்லி தூவி இறக்கவும். உருளைக் கிழங்கு மொச்சை கரம் மசாலா ரெடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.